இந்தியாவில் செலுத்தப்பட்ட  கரோனா தடுப்பூசிகளின்  எண்ணிக்கை 40 கோடியை நெருங்கியது

இந்தியாவில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 40 கோடியை நெருங்கியது
இந்தியாவில் செலுத்தப்பட்ட  கரோனா தடுப்பூசிகளின்  எண்ணிக்கை 40 கோடியை நெருங்கியது
இந்தியாவில் செலுத்தப்பட்ட  கரோனா தடுப்பூசிகளின்  எண்ணிக்கை 40 கோடியை நெருங்கியது

இந்தியாவில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 40 கோடியை நெருங்கியது என மத்திய சுகாதாரம்  மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம்  தெரிவித்திருக்கிறது.

கரோனா பெருந்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் போடப்பட்டுவரும் தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இதில் 18-44 வயது உள்ளவர்களில் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 11.8 கோடி பேர் , இதில் இரண்டாவது தவணை எடுத்துக் கொண்டவர்கள் 44 லச்சமாகவும்   45-59 வயதைச் சேர்ந்தவர்களில் 9.60 கோடி பேர் முதல் தவணையும் அதில் 2.62 கோடி மக்கள் இரண்டாவது தவணையும் எடுத்துக்கொண்டதாகவும் மேலும் 60  வயதைக் கடந்தவர்களில்  முதல் தவணை தடுப்பூசியை எடுத்துக்கொண்ட  7.4 கோடி பேரில் 2.97 கோடி மக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டதாகவும்  தற்போது வரை நாடு முழுவதும்    39 கோடிக்கும் அதிகமான  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com