தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 59,410 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 36 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.06 சதவிகிதம்.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,35,565 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,09,968 பேர் குணமடைந்துள்ளனர். 25,030 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 567 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.