எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை ஜூலை 22 வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து அமளியில் ஈடுபட்டனர். இஸ்ரேலிய உளவு நிறுவனம் நாட்டின் பத்திரிகையாளர்கள், அமைச்ஹர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை உளவு பார்த்தது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதம் நடத்தக் கோரினர். மேலும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவைவில் விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாநிலங்களவை ஜூலை 22ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது, வேளாண் சட்டங்கள், பெட்ரோல் விலை உயர்வு, எல்லைப் பிரச்னை, தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.