பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் சித்து சந்திப்பு

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்து முதல்வர் அமரீந்தர் சிங்கை கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தார்.
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் சித்து சந்திப்பு
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் சித்து சந்திப்பு

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்து முதல்வர் அமரீந்தர் சிங்கை கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தார்.

முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சித்து இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது.

இந்நிலையில், இன்று காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்கவுள்ள நிலையில் முதல்வர் அமரீந்தர் சிங் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்திற்கு மாநிலத்தின் அனைத்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சித்துவும் இந்த நிகழ்வில் பங்கேற்று, முதல்வருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிகழ்விற்கு பிறகு, மாநில காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்கவுள்ள நிகழ்வில் முதல்வர் உள்பட அனைத்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்மூலம், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக பஞ்சாப் காங்கிரஸில் நிலவி வந்த உள்கட்சி பூசல் முடிவுக்கு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com