கேரளத்தில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியது:
"மாநிலத்தில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 பேர் இன்னும் ஜிகா பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்."
நேற்றைய தினம் 4 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.