பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில், பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
இந்நிலையில், பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கூட்டத்தின் முதல் நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மாநிலங்களவையில் பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியை அடுத்து பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, இன்று மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் விவாதம் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் அமளியினால் தற்போது மீண்டும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெகாஸஸ் விவகாரத்தினால் தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்கி வருவது குறிப்பிடத்தக்கது.