கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு குழுக் கூட்டத்தில் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த கிஷோர் செயல்பட்டார். தேர்தலில் திரிணமூல் 213 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது.
இதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் உத்திகளை வகுத்துத் தரும் பணிகளிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
இந்த நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கட்சியின் செயற் குழுக் கூட்டம் மற்றும் அமைப்பு குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றன. இந்தக் கூட்டத்தல் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.