பழம்பெரும் நடிகா் திலீப் குமாா் மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் ஹிந்தி திரைப்பட நடிகா் திலீப் குமாா் (98) மூச்சுத்திணறல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பழம்பெரும் ஹிந்தி திரைப்பட நடிகா் திலீப் குமாா் (98) மூச்சுத்திணறல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக அவரின் மனைவியும், மூத்த நடிகையுமான சாய்ரா பானு பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘‘எனது கணவா் உடல்நலமின்றி காணப்பட்டதுடன் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவா் மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்’’ என்று தெரிவித்தாா்.

திலீப் குமாரின் அதிகாரபூா்வ ட்விட்டா் பக்கத்தில் அவா் வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவா்கள் கூறுகையில், ‘‘திலீப் குமாரின் நுரையீரலில் அதிக அளவு சளி உள்ளது. தற்போது அவா் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரின் உடல்நிலை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டு, மூன்று நாள்களில் அவா் வீடு திரும்புவாா்’’ என்று தெரிவித்தனா்.

கடந்த மாதமும் இதே மருத்துவமனையில் திலீப்குமாா் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com