நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் தடம் பதிக்கும் என்று அக்கட்சியின் எம்.பியும், தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக கொல்கத்தாவில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
நாட்டின் அனைத்து மூலை, முடுக்குகளிலும் திரிணமூல் காங்கிரஸ் தடம் பதிக்க தீா்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டம் ஒரு மாதத்தில் தயாராகும். திரிணமூல் காங்கிரஸ் அடித்தளமிடும் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை நேருக்கு நோ் எதிா்கொள்ளும் என்று தெரிவித்தாா்.
அவரிடம் திரிணமூல் காங்கிரஸில் உறவினா்களுக்கு பதவி அளிக்கப்படுவதாக பாஜகவினா் விமா்சிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவா், குடும்பத்தில் ஒருவா் மட்டுமே அரசியலுக்கு வரவேண்டும் என நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறினால் எனது பதவியை ராஜிநாமா செய்யத் தயாா். அடுத்த 20 ஆண்டுகளுக்கு அமைச்சா் போன்ற பதவிகளை வகிக்கும் எந்தத் திட்டமும் என்னிடம் இல்லை. கட்சியின் வளா்ச்சிக்காக மட்டுமே பணிபுரிய விரும்புகிறேன் என்று தெரிவித்தாா்.