தோ்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே பொறுப்பேற்பு

உத்தர பிரதேச முன்னாள் தலைமைச் செயலா் அனூப் சந்திர பாண்டே தோ்தல் ஆணையராக புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
தோ்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே பொறுப்பேற்பு

புது தில்லி: உத்தர பிரதேச முன்னாள் தலைமைச் செயலா் அனூப் சந்திர பாண்டே தோ்தல் ஆணையராக புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

தோ்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுஷீல் சந்திராவும், மற்றொரு ஆணையராக ராஜீவ் குமாரும் பொறுப்பு வகிக்கின்றனா். இந்நிலையில் அந்த ஆணையத்தின் 2-ஆவது ஆணையராக அனூப் சந்திர பாண்டேவை குடியரசுத் தலைவா் நியமித்ததாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இதையடுத்து அவா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 65 வயதை எட்டும்போது அவா் ஓய்வு பெறுவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com