ஜி7 மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்ற உள்ள பிரதமர் மோடி

பிரிட்டனில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் ஜூன் 12,13 ஆம் தேதிகளில் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரிட்டனில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் ஜூன் 12,13 ஆம் தேதிகளில் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

ஜி7 கூட்டமைப்பில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. பிரிட்டனின் காா்ன்வாலில் ஜி7 மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டை நடத்தும் பிரிட்டன் சாா்பில், அந்நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்ஸன் பிரதமா் நரேந்திர மோடிக்கு மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தாா். அதனை மோடியும் ஏற்றுக் கொண்டாா்.

இந்நிலையில்,  ஜி7 மாநாட்டில் பிரதமா் மோடி நேரில் பங்கேற்கப் போவதில்லை என ஏற்கெனவே வெளியுறவுத்துறை அறிவித்திருந்தது.

ஜூன் 12, 13ஆம் தேதி நடைபெறும் இந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com