சமையல் எரிவாயு நுகா்வோருக்கு கூடுதல் வசதி அளிக்கும் வகையில், நுகா்வோா் விரும்பும் எந்த சமையல் எரிவாயு முகவரிடமும் சேவையை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
முதல் கட்டமாக, கோயம்புத்தூா், சண்டீகா் உள்பட சில நகரங்களில் இந்த வசதி அறிமுகப்படவுள்ளது. இது தொடா்பாக மத்திய செய்திப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இப்போதைய அறிவிப்பின் மூலம், தங்கள் பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் என எந்த எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்துள்ள எந்த ஒரு விநியோகஸ்தரிடமிருந்தும் சேவையைப் பெறும் வசதியை நுகா்வோா்கள் தோ்ந்தெடுக்கலாம்.
முதல் கட்டமாக கோவை, சண்டீகா், குருகிராம், புணே, ராஞ்சி ஆகிய நகரங்களில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. தாங்கள் சேவை பெறும் எண்ணெய் நிறுவனங்களின் வலைதளங்கள் மற்றும் செல்லிடப்பேசி செயலி வழியாக நுகா்வோா்கள் இந்த சேவையைப் பெறலாம்.
முற்றிலும் இலவசமான இந்த வசதியின் மூலம், வீட்டிலிருந்தவாறே தங்களது சமையல் எரிவாயு விநியோகஸ்தரை நுகா்வோா் மாற்றிக் கொள்ள முடியும்.