ரயில்கள் மூலம் நாடு முழுவதும் 30,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு சேர்ப்பு

பல்வேறு தடைகளை கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவப் பிராணவாயுவை விரைவு ரயில்கள் மூலம் விநியோகித்து வருவதன் மூலம் நிவாரணம் அளிக்கும் பயணத்தைத் தொடரும் இந்திய ரயில்வே,
ரயில்கள் மூலம் நாடு முழுவதும் 30,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு சேர்ப்பு


புதுதில்லி:  பல்வேறு தடைகளை கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவப் பிராணவாயுவை விரைவு ரயில்கள் மூலம் விநியோகித்து வருவதன் மூலம் நிவாரணம் அளிக்கும் பயணத்தைத் தொடரும் இந்திய ரயில்வே, இதுவரை 30 ஆயிரம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவை விரைவு ரயில்கள் மூலம் கொண்டு சேர்த்து தேசத்திற்கான சேவையில் புதிய மைல்கல்களை கடந்துள்ளது. 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு இதுவரை 421 ஆக்சிஜன் விரைவு ரயில்கள் மூலம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு 1,734 டேங்கர்களில் 30,182 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களுக்கு 15,000 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் பிராணவாயும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களுக்கு முறையே சுமார் 4,900, 3600 மற்றும் 3,700 மெட்ரிக் டன் மருத்துவப் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 10 டேங்கர்களில் 177 மெட்ரிக் டன் மருத்துவப் பிராணவாயுவுடன் 2 விரைவு ரயில்கள் பயணம் செய்து வருகின்றன.

இதுவரை தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளம், தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் உள்ளிட்ட 15 மாநிலங்கள் பிராணவாயுவைப் பெற்றுள்ளன.

தமிழகத்திற்கு 4,941 மெட்ரிக் டன், மகாராஷ்டிரத்திற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3,797 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், தில்லிக்கு 5,722 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 2,354 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகத்திற்கு 3,782 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரத்திற்கு 3,664 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளத்திற்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 2,972 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 480 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக சில ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று இரவு தங்களது பயணத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 24 -ஆம் தேதி மகாராஷ்டிராவில் இருந்து 126 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் பிராணவாயுடன் விரைவு ரயில்கள் மூலம் தங்கள் விநியோகங்களைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com