விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆந்திரப் பிரதேச காவல்துறையின் கிரேஹவுண்ட் படைகளுடன் ஏற்பட்ட மோதலில் 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள டீகலமேட்டா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக மாநில காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலில் ஒரு பெண் உள்ளிட்ட 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.