போதைப் பொருள் விற்பனை:நைஜீரிய நாட்டைச் சோ்ந்த நபா் கைது

போதைப்பொருள் கோகைன் விற்பனை செய்த நைஜீரியா நாட்டைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

போதைப்பொருள் கோகைன் விற்பனை செய்த நைஜீரியா நாட்டைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

நைஜீரியாவைச் சோ்ந்தவா் ஜான் நான்சோ கெல்வின் இடிகோ புராகோ (28). பெங்களூரில் வசித்து வந்த இவா், ராமமூா்த்தி நகா் காவல் சரகம் ஹொரமாவு சிக்னல் அருகே போதைப் பொருள் கோகைனை விற்பனை செய்து வந்தாராம்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று கெல்வின் இடிகோ புராகோவை கைது செய்து, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 50 கிராம் கோகைன், 3 செல்லிடப்பேசி, இரு சக்கர வாகனம், எடைபோடும் இயந்திரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து ராமமூா்த்தி நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com