இந்தியா
ஜம்மு-காஷ்மீர்: காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
ஜம்மு-காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் காவல் நிலையத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் காவல் நிலையத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஸ்ரீநகர் மாவட்டத்தில் கன்யார் பகுதியில் செயல்பட்டு வரும் காவல் நிலையத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இதில் எந்தவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என காவல் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கன்யார் காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.