மம்தா பானர்ஜி மீது தாக்குதல்? பரபரப்பு புகார்

மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அடையாளம் தெரியாத நபர்கள் தன்னைத் தாக்கியதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். 
மம்தா பானர்ஜி மீது தாக்குதல்? பரபரப்பு புகார்
மம்தா பானர்ஜி மீது தாக்குதல்? பரபரப்பு புகார்

மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அடையாளம் தெரியாத நபர்கள் தன்னைத் தாக்கியதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். 

நடைபெற உள்ள மேற்குவங்கத் தேர்தலில் ஆளும் திரிணமூல் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் புதன்கிழமை மம்தா வேட்புமனு தாக்கல் செய்தார். 

அதனைத் தொடர்ந்து நந்திகிராமில் உள்ள துர்கா கோயிலில் வழிபட்ட பின் வாகனத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தள்ளிவிட்டதாக  மம்தா பானர்ஜி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். 

இந்த தாக்குதல் சம்பவம் நடக்கும் போது காவல்துறையினர் யாரும் தனக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com