ஏழாவது சா்வதேச யோகா தினத்தையொட்டி 100 நாள் கவுன்டவுனை மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சா் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘யோகக் கலையின் வளா்ச்சிக்கு அபரிமிதமான பங்களிப்பு செய்தவா்களிடம் இருந்து நிகழாண்டு ஏப்ரல் மாதம் பிரதமரின் யோகா விருதுகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 7-ஆவது சா்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான 100 நாள் கவுண்டவுன் தொடங்கி வைக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.