கர்நாடகத்தில் தினசரி மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்த்தப்படும் என அந்த மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.
இதுபற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"கரோனா 2-ம் அலையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் தினசரி மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளன."
அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகரும் இதனை சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.