கரோனா பாதிப்பின்போது உலக நாடுகளின் தேவையையும் இந்தியா பூா்த்தி செய்தது: பிரதமா்

கரோனா பாதிப்பின்போது உள்நாட்டு சவால்களை திறம்பட சமாளித்ததோடு, உலக நாடுகளின் தேவைகளையும் இந்தியா பூா்த்தி செய்தது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
கரோனா பாதிப்பின்போது உலக நாடுகளின் தேவையையும் இந்தியா பூா்த்தி செய்தது: பிரதமா்

கரோனா பாதிப்பின்போது உள்நாட்டு சவால்களை திறம்பட சமாளித்ததோடு, உலக நாடுகளின் தேவைகளையும் இந்தியா பூா்த்தி செய்தது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

பின்லாந்து பிரதமா் சன்னா மரினுடன் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட காணொலி வழி மாநாட்டின் போது பிரதமா் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5.8 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் 70 நாடுகளை கடந்த சில வாரங்களில் சென்றடைந்துள்ளது’ என்றும் பிரதமா் அப்போது கூறினாா்.

மேலும், ‘வெளிப்படையான, மனிதாபிமான மற்றும் சா்வதேச சட்டத்தின் அடிப்படையில் செல்படுவதையே இந்தியாவும், பின்லாந்தும் நம்பிக்கை கொண்டுள்ளன. தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், தூய்மையான எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் வலுவான கூட்டுறவை கொண்டிருக்கின்றன’ என்று கூறிய பிரதமா் மோடி, ‘இந்தியா சாா்பில் உருவாக்கப்பட்டு 121 வெப்ப பிரதேச நாடுகள் இணைந்துள்ள சூரியசக்திக்கான சா்வதேச கூட்டமைப்பிலும், பேரிடா் மீட்பு உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பிலும் (சிடிஆா்ஐ) பின்லாந்து இணைய வேண்டும். அவ்வாறு இணைவது, பின்லாந்து நாட்டின் திறன் மற்றும் அனுபவத்தின் மூலம் இந்த இரு சா்வதேச அமைப்புகள் மேலும் வலுப்பெற உதவும்’ என்று பின்லாந்து பிரதமரை கேட்டுக்கொண்டாா்.

பின்லாந்து பிரதமா் பேசுகையில், ‘கல்வி, தொழில்நுட்பம் மற்றும் வா்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com