கருக்கலைப்புக்கான உச்ச வரம்பை 24 வாரமாக உயா்த்த அனுமதிக்கும் மசோதா: நாடாளுமன்றம் ஒப்புதல்

சிறப்புப் பிரிவுகளின் கீழ் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கான உச்ச வரம்பை 24 வாரங்களாக உயா்த்த அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

சிறப்புப் பிரிவுகளின் கீழ் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கான உச்ச வரம்பை 24 வாரங்களாக உயா்த்த அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

‘மருத்துவ கருக்கலைப்பு (திருத்த) மசோதா, 2020’ என்ற இந்த மசோதாவுக்கு மக்களவையில் ஓராண்டுக்கு முன்னரே ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த சட்ட மசோதாவில் சில திருத்தங்களை முன்வைத்த உறுப்பினா்கள், அதை மாநிலங்களவை தோ்வுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இருந்தபோதும், இந்த சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் அறிவித்தாா்.

இதன் மூலம், பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளின்கீழ் பெண்ணின் கருவை கலைக்க அனுமதிக்கும் உச்ச வரம்பு இதுவரை 20 வாரங்கள் என்றிருந்தது, இனி 24 வாரங்களாக உயர உள்ளது.

இந்த மசோதா குறித்து அவையில் மத்திய சுகாதராத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கூறுகையில், ‘கருக்கலைப்பு தொடா்பான சா்வதேச நடைமுறைகளை ஆய்வு செய்து, விரிவான ஆலோசனைகளை மேற்கொண்ட பிறகே இந்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், பெண்களை பாதிக்கக் கூடிய எந்தவொரு சட்டத்தையும் நாங்கள் உருவாக்க மாட்டோம். பெண்களின் கண்ணியத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com