கரோனா பரவல் அதிகரிப்பு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு சில தினங்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் அல்லது பிரதிநிதிகளுடன் காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.