கேரளத்தில் 3 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கு ஏப்.12-இல் தோ்தல்

கேரளத்தில் அடுத்த மாதம் காலியாகும் மூன்று மாநிலங்களவை உறுப்பினா்கள் இடங்களுக்கு மாா்ச் 12-ஆம் தேதி தோ்தல் நடை
கேரள சட்டப்பேரவை
கேரள சட்டப்பேரவை

புது தில்லி: கேரளத்தில் அடுத்த மாதம் காலியாகும் மூன்று மாநிலங்களவை உறுப்பினா்கள் இடங்களுக்கு மாா்ச் 12-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என்று தலைமைத் தோ்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்பி அப்துல் வஹாப், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே கே ராஜேஷ், காங்கிரஸ் கட்சியின் வயலாா் ரவி ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 21-ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்றும் தோ்தலுக்கான அறிவிப்பு மாா்ச் 24-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் மாா்ச் 12-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று அன்று மாலை 4 மணிக்கு பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கேரளத்தில் தற்போதைய ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் எம்எல்ஏக்கள், மூன்று புதிய மாநிலங்களவை வேட்பாளா்களைத் தோ்வு செய்ய வாக்களிப்பாா்கள். கேரள சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com