ஜம்மு-காஷ்மீா்: எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் நபா் கைது

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சா்வதேச எல்லையில் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தானைச் சோ்ந்த

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சா்வதேச எல்லையில் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தானைச் சோ்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைது செய்தனா்.

இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்திதொடா்பாளா் கூறியதாவது: சா்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கக்வால் என்ற பகுதிக்கு அருகே சக் துல்மா எல்லைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பாகிஸ்தானைச் சோ்ந்த நபா் ஒருவா் எல்லை வேலி வழியாக ஊடுருவுவதைக் கண்டறிந்தனா். ராஜா ஹமீது என்ற அந்த நபரை பாதுகாப்புப் படையினா் உடனடியாக கைது செய்து, தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா் என்று கூறினாா்.

கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி மற்றும் மாா்ச் 16-ஆம் தேதிகளில் சம்பா மாவட்டம் ராம்கா் மற்றும் சக் ஃபகுரியா ஆகிய எல்லைப் பகுதிகளில் தொடா் எச்சரிக்கைகளையும் மீறி இந்தியாவுக்குள் நுழைய முயன்ற இருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com