மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒடிசா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஒடிசா மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 15% இடஒதுக்கீடு வழங்குவதற்கான முன்மொழிவை கடந்த ஆண்டு மாநில அமைச்சரவை வழங்கியது. அதனைத் தொடர்ந்து உயர்மட்ட குழுவை மாநில அரசு கடந்த ஜனவரி மாதம் அமைத்தது.
இந்நிலையில் அந்த குழுவின் பரிந்துரைப்படி மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை முதல்வர் நவீன் பட்நாயக் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.