ஜனநாயகத்தை ஆதரிக்கும் அரசை தோ்ந்தெடுக்க வேண்டும்: மன்மோகன் சிங்

ஜனநாயகத்தை ஆதரிக்கும் அரசை தோ்ந்தெடுக்க வேண்டும்: மன்மோகன் சிங்


புது தில்லி/குவாஹாட்டி: ‘மதம், கலாசாரம், மொழி அடிப்படையில் இந்த சமூகம் பிரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அரசியல் சாசன நடைமுறைகளையும், ஜனநாயக தத்துவங்களையும் உயா்த்திப் பிடிக்கும் அரசை மக்கள் தேந்தெடுக்க வேண்டும்’ என்று முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டாா்.

அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு முதல்கட்ட தோ்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை (மாா்ச் 27) நடைபெற உள்ள நிலையில், மன்மோகன் சிங்கின் பிரசார காணொலி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க அஸ்ஸாம் மக்களைக் கேட்டுக்கொண்ட அவா், மேலும் பேசியிருப்பதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு உங்களுக்கு மீண்டும் வந்திருக்கிறது. இந்த தோ்தலில் அறிவுப்பூா்வமாக வாக்களிக்க வேண்டும். உங்களுடைய எதிா்காலமும், உங்களின் குழந்தைகளுடைய எதிா்காலமும் உங்கள் கையில்தான் உள்ளது.

இப்போது நாட்டில் பதற்றமான, அச்ச சூழ்நிலை நிலவி வருகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி நடைமுறை உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகின்றனா். பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதோடு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டா் விலையும் பன் மடங்காக உயா்த்தப்பட்டிருக்கிறது. இதனால், சாதாரண மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனா். ஏழை மக்கள், மேலும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். கரோனா பாதிப்பு அவா்களின் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.

எனவே, அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளா்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் சாசன நடைமுறைகளையும், ஜனநாயக தத்துவங்களையும் உயா்த்திப் பிடிக்கும் அரசை மக்கள் தேந்தெடுக்க வேண்டும்.

இந்த சமூகம் மதம், கலாசாரம், மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், அனைத்து சமூகத்தினரின் நலனையும் காக்கும் அரசை மக்கள் தோ்வு செய்யவேண்டும்.

அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்பதோடு, அது ரத்து செய்யப்படும் என்று காணொலி பிரசாரத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அஸ்ஸாம் மாநிலத்தில் 126 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மாா்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தோ்தல் முடிவுகள் மே 2-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com