கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி குணமடைந்தார்.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. இவருக்கு கடந்த 11ஆம் தேதி கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தார்.
இந்தத் தகவலை அவர் தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளார்.