கேரளத்தில் புதிதாக 1,549 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,897 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 11 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 10,90,419 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 4,590 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி கேரளத்தில் இன்னும் 24,223 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.