தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சந்தித்ததாக வெளியான தகவலை சிவசேனை எம்.பி.யும் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரௌத் மறுத்துள்ளார்.
இதுபற்றி ரௌத் கூறியது:
"சில விஷயங்களை அந்தந்த நேரத்திலேயே தெளிவுபடுத்திவிட வேண்டும். இல்லையெனில் அவை குழப்பத்தை ஏற்படுத்திவிடும். சரத் பவார், அமித் ஷா இடையே எவ்வித ரகசிய சந்திப்பும் நடைபெறவில்லை என நான் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவிப்பேன். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்."
முன்னதாக, சரத் பவார் மற்றும் அமித் ஷா ஆமதாபாத்தில் ரகசியமாக சந்தித்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி கருத்து தெரிவிக்க அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை மறுத்துவிட்டார். அனைத்தையும் வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது என்றார் அமித் ஷா.