ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கவுன்சிலர், போலீசார் பலி ஆகியோர் பலியானார்கள்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவிக்கையில், பாரமுல்லாவின் சோபோர் பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் இன்று நுழைந்த பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த சம்பத்தில் கவுன்சிலர் ரியாஸ் அகமது மற்றும் போலீசார் என இருவர் பலியாகினர். மேலும் ஒரு கவுன்சிலர் படுகாயம் அடைந்தார் என்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.