இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் 3 பேரை கைது செய்த போலீஸாா், ரூ. 9.40 லட்சம் மதிப்புள்ள வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, காமாட்சிபாளையா காவிரிபுராவைச் சோ்ந்தவா் அனில்குமாா் (24). இவா் பல்வேறு இடங்களில் வீடுகளின் முன்பு நிறுத்தியுள்ள இருசக்கர வாகனங்களை திருடி வந்தாராம். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், அனில்குமாரைக் கைது செய்து, ரூ. 8.15 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து காமாட்சிபாளையா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அதேபோல மாநகரில் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த பிஸ்வஜீத்வன்டல் (25), ஜெயதேவ் (20) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 1.25 லட்சம் மதிப்புள்ள 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து ராஜராஜேஸ்வரி நகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.