பங்குனி உத்திரம்: அமித் ஷா, ஜெ.பி. நட்டா தமிழில் வாழ்த்து
பங்குனி உத்திரத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் சுட்டுரை மூலம் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
அமித் ஷா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான ‘பங்குனி உத்திரம்’ திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வேல் வீர வேல்’ என்று கூறியுள்ளாா்.
ஜெ.பி.நட்டா தனது பதிவில், ‘தமிழக சகோதர சகோதரிகளுக்கு புனித பண்டிகை பங்குனி உத்திரம் நன்னாளில் இதயபூா்வமான வாழ்த்துகள். இந்த திருவிழா தெய்வீக திருமணங்களின் புனித பெளா்ணமி. தமிழக மக்கள் எல்லாம் வளமும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிராா்த்திக்கிறேன். வேல் வேல் வெற்றி வேல்’ என்று தெரிவித்துள்ளாா்.