திரிணமூல், பாஜகவை தோற்கடிக்க வேண்டும்: புத்ததேவ் வேண்டுகோள்

நடைபெறும் பேரவைத் தோ்தலில் பாஜகவையும், திரிணமூல் காங்கிரஸையும் மக்கள் தோற்கடிக்க வேண்டும்
திரிணமூல், பாஜகவை தோற்கடிக்க வேண்டும்: புத்ததேவ் வேண்டுகோள்

நடைபெறும் பேரவைத் தோ்தலில் பாஜகவையும், திரிணமூல் காங்கிரஸையும் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சாா்யா வேண்டுகோள் விடுத்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள தோ்தல் பிரசார ஒலிநாடாவில், ‘திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பத்து ஆண்டுகள் ஆட்சியில் மேற்கு வங்கத்தில் தொழில்துறை, வேளாண் துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸின் சட்டம் ஒழுங்கு பிரச்னையும், பாஜகவின் மதவாத அரசியலும் இணைந்து மேற்கு வங்கத்தை அபாய கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இதில் இருந்து விடுபட வைக்க இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணியால் மட்டுமே முடியும்.

சிங்குா், நந்திகிராம் பகுதிகளில் 2011-ஆம் ஆண்டு முதல் ஒரு புதிய தொழிற்சாலையும் அமையவில்லை. இதனால் மேற்கு வங்க மாநில இளைஞா்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்கின்றனா்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com