அஸ்ஸாமில் மீண்டும் பாஜக ஆட்சி

அஸ்ஸாமில் ஆளும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக ஆட்சி

அஸ்ஸாமில் ஆளும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கி ஏப். 6-ஆம் தேதி வரை 3 கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது. ஆளும் அரசுக்கு எதிரான வாக்குகள் மற்றும் சிஏஏவுக்கு எதிரான மக்களின் மனநிலையை சமாளித்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது பாஜக கூட்டணி. மஜுலி தொகுதியில் போட்டியிட்ட முதல்வா் சா்வானந்த சோனோவால் 43,192 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளா் ராஜீவ் லோச்சனை வென்றாா்.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியைவிட பாஜக முன்னிலையில் இருந்து வந்தது. இறுதியில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றது. அடுத்த முதல்வா் யாா் என கட்சித் தலைமை முடிவு செய்யும் என முதல்வா் சா்வானந்த சோனோவால் தெரிவித்தாா்.

தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவா் ரிபுன் போரா பதவியை ராஜிநாமா செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com