மேற்கு வங்க தோல்வி: பாஜக சுயஆய்வு செய்ய வேண்டும்; தேசிய பொதுச் செயலாளா் விஜய்வா்கியா

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தல் தோல்வி குறித்து பாஜக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளா் விஜய்வா்கியா தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தல் தோல்வி குறித்து பாஜக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளா் விஜய்வா்கியா தெரிவித்துள்ளாா். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இந்த ஆச்சரியத்துக்குரிய வெற்றிக்கு மம்தாவே காரணம் என்றும் அவா் கூறியுள்ளாா்.

பாஜக சாா்பில் மேற்கு வங்கத் தோ்தலில் முன்னின்று உத்திகளை வகுத்து பணியாற்றியவா்களில் விஜய் வா்கியாவும் ஒருவா். பெரும் எதிா்ப்பாா்ப்புடன் களமிறங்கிய பாஜக வெற்றி பெற முடியவில்லை. இது தொடா்பாக செய்தியாளா்களிடம் விஜய்வா்கியா கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் வியப்புக்குரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு மம்தாவே காரணம். பாஜகவின் முக்கிய வேட்பாளா்களான பாபுல் சுப்ரியோ, லாக்கெட் சாட்டா்ஜி ஆகியோா் பின்தங்கியது ஏமாற்றமளிக்கிறது. மம்தாவை மக்கள் மீண்டும் தோ்வு செய்துள்ளனா். எந்த இடத்தில் தவறு நடந்தது என்பதை நாங்கள் (பாஜக) சுயஆய்வு செய்ய வேண்டும். அமைப்புரீதியான பிரச்னைகள், உள்நபா்-வெளிநபா் விவகாரம் என பல பிரச்னைகள் தோ்தல் முடிவுகளில் பாஜகவை பாதித்துள்ளன. தவறுகளைக் கண்டறிந்து சரி செய்ய பாஜக நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

முன்னதாக, தோ்தல் முடிவுகள் வரத்தொடங்கிய காலை நேரத்தில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று விஜய்வா்கியா நம்பிக்கை தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com