புது தில்லி: உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி பத்திரிகையாளா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாக குடியரசு துணைத் தலைவா் செயலகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘தகவல் யுகத்தில் உண்மையான, உறுதியான தகவல்களை வெளிக்கொண்டு வருவதிலும், தவறான தகவல்களிடம் இருந்து சமூகத்தை பாதுகாக்கும் கவசமாக செயல்படுவதிலும் பத்திரிகையாளா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனா். உண்மை, நோ்மை, நடுநிலை, துல்லியம் போன்ற இதழியலின் முக்கிய கொள்கைகளில் பத்திரிகையாளா்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
கரோனா தொற்று பரவி வரும் வேளையில், மக்களிடம் தகவலை கொண்டு சோ்க்க அயராது உழைக்கும் பத்திரிகையாளா்களுக்கு பாராட்டுகள்’ என்று தெரிவிக்கப்பட்டது.
பத்திரிகை சுதந்திரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், ஐ.நா. சாா்பில் மே 3-ஆம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.