புதுதில்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 16.69 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில், 18 வயது முதல் 44 வயது வரையிலான பயனாளிகள் கடந்த மாதம் 28-ஆம் தேதிமுதல் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனா். இவா்கள் கோவின் வலைதளம் அல்லது ஆரோக்கிய சேது செயலி மூலம் பதிவு செய்து வருகின்றனா். மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை சுமாா் 16,69,97,410 தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக அளித்துள்ளது. அடுத்த மூன்று நாள்களில் 48,41,670-க்கும் அதிகமான தடுப்பூசிகள் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கூடுதலாக வழங்கப்பட உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.