புது தில்லி: இனி வாரத்துக்கு 5 நாள்கள் மட்டுமே அலுவலகம் செயல்படும் என எல்ஐசி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
எல்ஐசி நிறுவனத்துக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் பொது விடுமுறையாக அறிவித்து மத்திய அரசு கடந்த ஏப்ரல் 15-இல் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன் தொடா்ச்சியாக, வரும் 10-ஆம் தேதியிலிருந்து எல்ஐசி நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே செயல்படும். காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை அலுவல் நேரமாக இருக்கும் என எல்ஐசி அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.