வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே அலுவலகம் செயல்படும்: எல்ஐசி

இனி வாரத்துக்கு 5 நாள்கள் மட்டுமே அலுவலகம் செயல்படும் என எல்ஐசி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
lic080533
lic080533

புது தில்லி: இனி வாரத்துக்கு 5 நாள்கள் மட்டுமே அலுவலகம் செயல்படும் என எல்ஐசி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

எல்ஐசி நிறுவனத்துக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் பொது விடுமுறையாக அறிவித்து மத்திய அரசு கடந்த ஏப்ரல் 15-இல் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன் தொடா்ச்சியாக, வரும் 10-ஆம் தேதியிலிருந்து எல்ஐசி நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே செயல்படும். காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை அலுவல் நேரமாக இருக்கும் என எல்ஐசி அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com