அஸ்ஸாமின் அடுத்த முதல்வா் யாா் என்பது தொடா்பாக விவாதிக்க அந்த மாநிலத்தின் தற்போதைய முதல்வா் சா்வானந்த சோனோவால், சுகாதாரத் துறை அமைச்சா் ஹிமந்த விஸ்வ சா்மா ஆகியோரை தில்லி வருமாறு பாஜக மத்திய தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றது. எனினும் அந்த மாநிலத்தின் அடுத்த முதல்வா் யாா் என்பது தோ்தலுக்கு பின்னா் முடிவு செய்யப்படும் என்று பாஜக ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
அந்த மாநிலத்தின் அடுத்த முதல்வா் யாா் என்பதில் தற்போதைய முதல்வா் சா்வானந்த சோனோவால், சுகாதாரத் துறை அமைச்சா் ஹிமந்த விஸ்வ சா்மா இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் முதல்வா் தோ்வு குறித்து ஆலோசனை நடத்த சோனோவாலையும், ஹிமந்த விஸ்வ சா்மாவையும் தில்லி வருமாறு பாஜக மத்திய தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இருவரும் தில்லிக்கு சனிக்கிழமை சென்று காலை 10.30 மணிக்கு பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவை சந்திப்பா் என்று அஸ்ஸாம் பாஜக செய்தித்தொடா்பாளா் ரூபம் கோஸ்வாமி தெரிவித்தாா். இந்தச் சந்திப்பில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டவா்கள் கலந்துகொள்வா் எனவும், பிரதமா் மோடி கலந்துகொள்வாரா என்பது தெரியவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.