தெலங்கானாவில் 10 நாள் முழு ஊரடங்கு அமலானது

தெலங்கானாவில் 10 நாள் முழு ஊரடங்கு அமலானது

தெலங்கானா மாநிலத்தில் முழு ஊரடங்கு இன்று அமலானது. அடுத்த 10 நாள்களுக்கு அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தெலங்கானா மாநிலத்தில் முழு ஊரடங்கு இன்று அமலானது. அடுத்த 10 நாள்களுக்கு அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தெலங்கானாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் மே 12 ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்தது. 

நேற்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று முழு ஊரடங்கு அமலானதையொட்டி சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக காலை 6 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே காய்கறி, மளிகைக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com