புது தில்லி: ஜூன் மாதம் நடைபெறவிருந்த மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் (யுபிஎஸ்ஸி) முதல் நிலைத் தோ்வு அக்டோபா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக யுபிஎஸ்ஸி வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஜூன் 27-ஆம் தேதி நடைபெறவிருந்த முதல் நிலைத் தோ்வு அக்டோபா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.