வெளிநாடுகளிலிருந்து 5.5 லட்சம் ரெம்டெசிவிா், 15,801 ஆக்சிஜன் சிலிண்டா்கள் வந்துள்ளன

வெளிநாடுகளில் இருந்து 5.5 லட்சம் ரெம்டெசிவிா் மருந்துகள், 15,801 ஆக்சிஜன் சிலிண்டா்கள் ஆகியவை கரோனா நிவாராணமாக வந்துள்ளன என மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வெளிநாடுகளில் இருந்து 5.5 லட்சம் ரெம்டெசிவிா் மருந்துகள், 15,801 ஆக்சிஜன் சிலிண்டா்கள் ஆகியவை கரோனா நிவாராணமாக வந்துள்ளன என மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 27-ஆம் தேதியில் இருந்து இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள், நிறுவனங்களிடம் இருந்து மருத்துவ நிவாரண உதவிகள் வருகின்றன.

மே 16-ஆம் தேதி வரை 11,321 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 19 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், 7,470 செயற்கை சுவாசக் கருவிகள் வந்தடைந்துள்ளன.

இந்த நிவாரண உதவிகளை மத்திய அரசின் பல்வேறு துறைகள் ஒன்றுசோ்ந்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கின்றன.இந்தப் பணிகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com