கரோனா தொற்று நோய்களின் மூன்றாவது அலைகளைக்கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடிவரும் நிலையில், பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி 100-க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 20,089 ஆக உயர்ந்துள்ளது.
ஒரேநாளில் 3000 பேர் நோய்த் தொற்று பதிவாகியுள்ளதையடுத்து, மொத்தம் இதுவரை 8,93,461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இதுவரை சுமார் 5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் தடுப்பூசி கிடைக்காதது மற்றும் உலகளாவிய விநியோக முறையான கோவாக்ஸின் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.