உத்தரப் பிரதேசத்தில் டிரக் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள மூவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மிரான்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிக்ரேடா கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நடைபெற்றது. மஞ்சு (30), அவரது மகன் அக்ஷே (20) மற்றும் மகள் ஷிதல் (23) ஆகியோர் பிஜ்னோரில் இருந்து வந்துக்கொண்டிருந்த போது எதிரே வந்த டிரக் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.