கோவேக்சின் தடுப்பூசி 30 நாள்களில் 30 நகரங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூத்த அலுவலர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இணை நிர்வாக இயக்குநர் சுசித்ரா இதனை சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
30 நகரங்களில் தமிழகத்தின் சென்னை மற்றும் கோவைக்கு கோவேக்சின் தடுப்பூசி விநியோகிக்கப்பட்டுள்ளது. இவை தனியார் மருத்துவமனை பயன்பாட்டுக்காக விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால், தடுப்பூசிகளின் எண்ணிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.
முன்னதாக, மே 1 முதல் 18 மாநிலங்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி நேரடியாக விநியோகிக்கப்படும் என நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.