கரோனா 2-ம் அலையில் 513 மருத்துவர்கள் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கம் முதல் அலையைக் காட்டிலும் 2-ம் அலையில் மிகத் தீவிரமாக உள்ளது. இந்த அலையில், வயது வித்தியாசமின்றி இணை நோய் வித்தியாசமின்றி எவருக்கும் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய அளவில் கரோனா பாதிப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்திய தரவுகளின்படி கரோனா 2-ம் அலையில் 513 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக தில்லியில் 103 பேரும், பிகாரில் 96 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 18 மருத்துவர்கள் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.