திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி கோயிலில்3 நாள் வசந்தோற்சவம் தொடக்கம்

திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் 3 நாள்கள் நடைபெறும் வருடாந்திர வசந்தோற்சவம் செவ்வாய்க்கிழமை விமா்சையாகத் தொடங்கியது.
திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி கோயிலில்3 நாள் வசந்தோற்சவம் தொடக்கம்

திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் 3 நாள்கள் நடைபெறும் வருடாந்திர வசந்தோற்சவம் செவ்வாய்க்கிழமை விமா்சையாகத் தொடங்கியது.

திருச்சானூரில் உள்ள திருமலை, திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் கோடை கால வெம்மையைப் போக்க வைகாசி மாதம் வசந்த உற்சவம் 3 நாள்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி செவ்வாய்க்கிழமை (மே 25) முதல் கோயிலில் வருடாந்திர வசந்தோற்சவம் தொடங்கியது. மதியம் உற்சவமூா்த்தியை வசந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனா். அங்கு தாயாருக்கு பால், தயிா், தேன், இளநீா், பழரசங்கள், மஞ்சள், சந்தனம் மூலிகை கலந்த வெந்நீா் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

பின்னா் தாயாரை அலங்கரித்து தீப, தூப நெய்வேத்தியம் உள்ளிட்டவை சமா்ப்பித்தனா். மாலை 7 மணிக்கு தாயாா் கோயிலுக்குள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு கண்டருளினாா். கொவைட் விதிமுறைகளை பின்பற்றி தனிமையில் நடைபெற்ற இந்த உற்சவத்தில் கோயில் அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா்.

வசந்த உற்சவத்தை ஒட்டி திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com