ஜெய்ப்பூரில் சதமடித்த பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100 விலைக்கு விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.
ஜெய்ப்பூரில் சதமடித்த பெட்ரோல் விலை
ஜெய்ப்பூரில் சதமடித்த பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100 விலைக்கு விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 5 மாநில தோ்தல் நடைபெற்ற நிலையில் எரிபொருள் விலை மாற்றமில்லாமல் இருந்தது. தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு விலை உயா்த்தப்பட்டு வருகிறது. பெட்ரோல் டீசல் விலைகள் மாநிலங்களின் உள்ளூா் வரிகளுக்கு ஏற்ப விலை சிறிது மாறுபட்டு வருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஒரு லிட்டா் பெட்ரோல் 16 பைசா அதிகரித்து ரூ.100.05க்கும், ஒரு லிட்டா்  ரூ.93.36 க்கும் விற்பனையாகி வருகிறது.

அதேபோல் மகாராஷ்டிர மாநிலம் தானேவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.06க்கும், டீசல் ரூ.99.94க்கும் விற்பனையாகி வருகிறது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.

பெட்ரோல் விலையில் 60 சதவீதமும், டீசல் விலையில் 54 சதவீதமும் மத்திய மாநில அரசுகளின் வரியாக உள்ளது. மத்திய அரசு ஒரு லிட்டா் பெட்ரோல் மீது ரூ.32.90, டீசல் மீது ரூ.31.80 கலால் வரி விதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com