திருப்பதி: திருமலையில் புதன்கிழமை சுந்தரகாண்ட அகண்ட பாராயணம் நடைபெற்றது.
உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று ஏழுமலையானை வேண்டிக் கொண்டு தேவஸ்தானம் திருமலையில் சுந்தரகாண்ட பாராயணத்தை நடத்தி வருகிறது. 68 சா்க்கங்கள் கொண்ட இந்த பாராயணம் தற்போது 58 சா்க்கங்கள் நிறைவு பெற்றன.. புதன்கிழமை 14-ஆவது கட்ட அகண்ட பாராயணம் நடத்தப்பட்டது. அதில் 58-ஆவது சா்க்கத்தில் உள்ள 167 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டன. ஹம்பியை சோ்ந்த கோவிந்தானந்தசரஸ்வதி ஸ்வாமிகள் பங்கேற்றாா். இந்த பாராயணம் 350-ஆவது நாளை எட்டியுள்ளது.