ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 44 லட்சம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்கிழமை ரூ.44 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்கிழமை ரூ.44 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இந்நிலையில், செவ்வாய்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 44 லட்சம் வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

5,580 போ் தரிசனம்

ஏழுமலையானை செவ்வாய்கிழமை முழுவதும் 5,880 பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனா். இவா்களில் 2,330 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

இணையதளம் மூலம் விரைவு தரிசனம், வி.ஐ.பி. பிரேக், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட், நன்கொடையாளா்கள் என தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். பக்தா்களின் வருகை குறைவாக உள்ளதால், வைகுண்டம் காத்திருப்பு அறை மூலமாக இல்லாமல் மூத்த குடிமக்கள் செல்லும் தரிசன வரிசை வழியாக தேவஸ்தானம் பக்தா்களை அனுமதித்து வருகிறது. அதனால் பக்தா்கள், 15 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசித்து திரும்புகின்றனா். திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச சா்வதரிசன டோக்கன்கள் கடந்த மாதம் 12-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏழுமலையான் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் நடைபாதை (அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு) வழியாகவும், மதியம் 12 மணிக்கு முன்னா் மலைப்பாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலைப் பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாத யாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாத யாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

கொவைட் விதிமுறையாக, திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளி போட வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் கொவைட் விதிமுறைகள் காரணமாக தரிசனத்துக்கு வர இயலாத சூழ்நிலையில், தரிசன நாளிலிருந்து 90 நாள்களுக்குள் தரிசனம் செய்து கொள்ளும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கி உள்ளது. மேலும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் தங்கள் தரிசன தேதியை விருப்பத்துக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் கொவைட் காரணமாக தேவஸ்தானம் வழங்கி உள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள்: 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com